Subscribe Us

header ads

வைத்தியசாலை அதிகாரிகளுக்கும், வைத்தியர்களுக்கும் மிரட்டல் மக்கள் கொதிப்பு (வீடியோ)


அசர மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சேவை புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் பல இடங்களில் அரச வைத்தியசாலைகளில் சேவை புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இதன் காரணமாக நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் புத்தளம்- ஹலாவத்த அரச மருத்துவமனையில் அசாதாரண சூழ்நிலை ஒன்று இன்று பகல் ஏற்பட்டுள்ளது.
அங்கு ஏராளமான நோயாளர்கள் சிகிச்சைக்காக வந்து காத்திருந்த போதும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்காது மருத்துவர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக அங்கு சிகிச்சை பெற வந்தவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளையும் வைத்தியர்களையும் கடுமையாக திட்டி உள்ளனர்.
“யாராவது ஒரு நோயாளிக்கு ஏதாவது ஆனாலும் கூட உங்களை விட்டு வைக்க மாட்டோம். உங்கள் அரசியல் விளையாட்டுகளை எம்மிடம் காட்டாதீர்கள்”
வைத்தியர்கள் என்ற ரீதியில் நடந்து கொள்ளுங்கள். இது கடைசி எச்சரிக்கை முறையாக நடந்து கொள்ளுங்கள். பார்கின்றோம் என்ன செய்கின்றீர்கள் என வைத்தியசாலை அதிகாரிகளுக்கும், வைத்தியர்களுக்கும் மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.
அங்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளும் இந்த சேவை புறக்கணிப்பினால் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக வருத்தம் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை அரசியல்வாதிகள் பின்னால் இருந்து இயக்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments