Subscribe Us

header ads

குருநாகல், மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது தாக்குதல்! (PHOTOS)


குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை 03:30 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதலினால் பள்ளிவாசலின் கண்ணாடிகளில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அண்மைக்காலங்களில் சிறுபான்மையினத்தவர்கள் மீது இனவாதப்போக்குடையவர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்துச் செல்வதுடன் பல அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இனவாதம் குறித்து ஜனாதிபதியின் முன்னிலையில் வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மல்லவபிடிய நியூஸ்








Post a Comment

0 Comments