நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இனவாத ரீதியான சம்பவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் தகுதி தராதரம் பாராது சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி, அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன் ஒரு பிரதேசத்தில் இப்படியான சம்பவங்கள் நடந்தால், அந்த பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் பொறுப்புக் கூறவேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
துறைக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்திருப்பதை நான் அறிவேன். இது முஸ்லிம், தமிழ், சிங்கள பிரச்சினையில்லை.
இது தேசிய பிரச்சினை. இதனை புரிந்து கொள்ள வேண்டும். இவ்வற்றை முஸ்லிம், சிங்களம், தமிழ் என பிரித்து பார்க்காமல் தேசிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மக்களுடன் வாழ்ந்து வரும் ஒருவர். தமது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை அறிந்து அவர் இந்த யோசனையை கொண்டு வந்துள்ளார். எனினும் இது தேசிய பிரச்சினை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய பிரச்சினைகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே நாங்கள் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் சிக்கல்கள் இல்லை.
மோதிக்கொள்ள முடியாது, கொலை செய்ய முடியாது, தீ வைக்க முடியாது. துப்பாக்கி சூடு நடத்த முடியாது. கடத்திச் செல்ல முடியாது.
கொலை செய்ய முடியாது. அதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். எம்முடன் விளையாட வேண்டாம் என இனவாதிகளிடம் கூறுகிறோம்.
இலங்கையில் இனவாதிகள், வடக்கிலும் இருக்கின்றனர். தெற்கிலும் இருக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலும் சிங்கள மக்கள் மத்தியிலும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒரே மைத்துனர்கள். இவர்கள் ஒரே இனத்தவர்கள். எம்முடன் விளையாட வேண்டாம் எனக் கூறி வைக்கின்றோம்.
இந்த நாட்டில் இனவாதம், அடிப்படைவாதம், பிரிவினைவாதம், பங்கரவாதம், அரச பயங்கரவாதம் என அனைத்தும் துடைத்தெறியப்பட்டுள்ளது. இவற்றுக்கு தலைத்தூக்க இடமளிக்க முடியாது.
வர்த்தகத்தில் ஈடுபடவும் சமய வழிபாடுகளில் ஈடுபடவும் தமது மொழியை பேசவும் கலாச்சாரத்தை பின்பற்றவும் நாட்டின் பிரஜைகளுக்கு உரிமை உள்ளது எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments