இவரின் அம்மா ஒரு ஆசிரியர் .
தன்னை போலவே தனது மகனும் படித்து ஒரு நல்ல தொழிலில் சேர வேண்டும் என்று அம்மா ஆசைப்பட்டாராம்.
ஆனால் இந்நபருக்கோ படிப்பில் பெரிதாக நாட்டமில்லை. ஒரே குழப்படி.
இவருக்கு தண்டனை கொடுக்க நினைத்த அம்மா ஒரு நாள் இவரை தனி அறைக்குள் வைத்து மூடி விட்டு பாடசாலை சென்று விட்டாராம்.
அந்த அறையை விட்டு வெளியே செல்ல நினைத்த இந்நபர் மாற்று வழியொன்றை யோசித்து அம்மாவுக்கு தெரியாமல் யன்னலை கழற்றி கொண்டு வெளியே செல்வாராம். அம்மா வரும் நேரம் பார்த்து உள்ளே வந்து இருந்து கொள்வாராம். இப்படி பல நாள் நடந்ததாம்.
அம்மா அன்று கொடுத்த தண்டனை தனக்கு படிப்பில் கவனம் செலுத்த உதவிய அதே நேரம் ஒரு வழி அடைக்கும் போது மாற்று வழிகள் பற்றி சிந்திக்க உதவியதாகவும் அதுவே இன்றைய தனது முன்னேற்றத்திற்கு காரணம் என்றும் சொல்கிறார் இவர்.
ஆம் யார் இவர் ?
நம் நாட்டின் மிகப்பெரிய வர்த்தக புள்ளி பெயர் - ரவி லியனகே.
இவரின் பல நிறுவனங்களில் ஒரு நிறுவனம் நமது பகுதியிலும் அமைந்துள்ளது.
"ரைகம்" உற்பத்தி நிறுவனத்தின் ஸ்தாபகர் இவரே.
-Infas-
0 Comments