Subscribe Us

header ads

தப்பித் தவறி மீண்டும் மகிந்தவின் ஆட்சி வந்தால் என்ன என்ன நடக்கும் சாபர் அஹமத்தின் வரிகள்


1 முஸ்லிம் எம்.பீக்கள் எல்லாம் வழக்கம் போல அமைச்சுப் பதவிகளில் இருப்பார்கள்.இலாகாக்களும், வாகனங்களும்,பாதுகாப்புப் பொலிசாரும்,அவர்களின் மோப்ப நாய்களும் மற்றுமே மாற்றமடைந்திருக்கும்.மற்றபடி சமூகத்தின் எல்லாப் பிரச்னைகளும் பத்து நாளாய் கழுவ வேண்டிய பெரும் அழுக்குத் துணி மலை போல அப்படி அப்படியே இருக்கும்...

2  எந்த அரச உற்சவங்களிலும் 'அப்பம் ' பரிமாறக் கூடாது என்று மகிந்தவின் கிச்சன் கபினெட்டில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கும்.

3  அமைச்சர்மார்களின் வீடுகள், படுக்கை அறை முதல் குளியலறை வரை சீ சீ ரீ வி கமெரா பொருத்தப்பட்டு இருக்கும்.இதை எல்லாம் அவதானிக்க ஒரு விசேட பிரிவு அலரி மாளிகையில் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கும்.

4 பொன்சேகாவுக்கு எதிராக எழுபத்து சொச்சம் வழக்குகளும் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிராக அவருக்கே எண்ண முடியாத அளவுக்கு வழக்குகளும் பதிவாகி இருக்கும்..முன்னால் மத்திய வங்கி தலைவர் உட்பட தற்போது உச்சத்தில் இருக்கும் பலருக்கு நிரந்தரச் சிறை தயராகி இருக்கும்.

5 வடகொரியா ஜனாதிபதி உயிருடன் இருந்தால் நாட்டுக்கு வருவார். ராக்கட் சயன்ஸ் படித்து இருக்கும் மகிந்தவின் இளைய மகன் ரோஹித்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து பொன் மாலைப் பொழுது ஒன்றில் கோல் ஃபேஸில் ஏவுகணை விடுவார்..அது யூ டேர்ன் அடித்து வந்து எங்கோ குடைக்குள் இருக்கும் காதல் ஜோடியின் மேல் விழுந்து வெடித்துச் சிதறும்.இந்தச் செய்தி மறு நாள் பத்திரிகைகளில் வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கும் அதே வேளை 'ஏகாதிபத்திய அமெரிக்கா முதலாளி வர்க்கமே ஒழிக' என்று கூட்டறிக்கைவிடப்பட்டு இருக்கும்..

6 சொப்பன சுந்தரி ஞானசாரவை தற்போதைய ஆட்சியாளர்கள் வைத்திருப்பது போன்று மகிந்த ஆட்சி செய்யும் போது அவர் அரசில் யாராவது வைத்திருப்பார்கள்..ரொம்பக் காஸ்ட்லியான விபச்சாரி போல் கைமாற்றப்பட்டு இருப்பார்..மாவனல்லையிலோ, அளுத்கமையிலோ, கண்டியிலோ கூட்டம் வைப்பார்.'ஆறு மணிக்கு முன்பு வீடுகளுக்கு போய்விடுங்கள்' என்று நியூஸ் சேவை நடத்துபவர்கள் எமக்கு எஸ் எம் எஸ் அனுப்புவார்கள்.

7உலமா சபையின் தலைவராக தற்போதைய தலைவரே இருப்பார்.சமூகம் வழக்கமாய் எதிர் கொள்ளும் நெருக்கடிகளில் எந்தவித மாற்றம் இல்லைபடியால் எல்லாமே பழைய Syllabus.ஆகவே தீர்வு சொல்வதில் எந்தத் தயக்கமும் சபைக்கு இருக்காது...அதே கோட் அதே டைலர்.....அதே வாடகை.........

8 ஐ.தே.க தலைவர் ரணில் கொள்ளுப்பிட்டி ஐந்தாம் லேனில் உள்ள தனது வீட்டில் சோர்ட் அணிந்து பர்கர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார். இங்லிசீல் யோசித்து கஷ்டத்துடன் சிங்களத்தில் யாருடனாவது பேசிக் கொண்டு இருப்பார்.

9 சீனா இலங்கையில் மெட்ரோ ரயில் சேவை வேலைகலை ஆரம்பிக்கும்.நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படத் தொடங்கும்.சீனர்களுக்கு இலங்கையில் வசிக்க இரட்டை பிராஜவுரிமை வழங்கப்படும் என்பதால் அதை எதிர்த்து ஜே.வி.பி. இனரும் யுனிவர்சிட்டி மாணவர்களும் ஆர்ப்பாட்டம் செய்வர்.

10.அநேகமாய் இம்முறை உலமாக்கட்சித் தலைவர் முபாரக் மெளலவி, தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் இருப்பார்.உடனுக்குடன் லைவ் வீடியோ, பதிவுகள் என்று வேற லெவலில் அசரவைப்பார்..கடைசியாய் அவர் போட்ட பதிவுக்கு நான்கு மணி நேரத்தில் 42 லைக்ஸ் வந்து இருக்கும்..மெளலவியைக் கலாய்த்து கமெண்ட்ஸ் எழுதிய ஏழெட்டு ஆசாமிகள் ப்ளொக் செய்யப்பட்டு இருப்பார்கள்..

-Zafar Ahamed-

Post a Comment

0 Comments