1863 : கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1877 : ஓட்டோமான் பேரரசு மீது ரஷ்யா போர் பிரகடனம் செய்தது.
1908 : அமெரிக்காவின் லூசியானாவில் புயல் காரணமாக 143 பேர் கொல்லப்பட்டனர்.
1915 : ஆர்மீனிய இனப்படுகொலை: இஸ்தான்புலில் பல்லாயிரக்கணக்கான ஆர்மேனியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஏனையோர் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர்.
1955 : இந்தோனேஷியாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணி சேரா நாடுகளின் முதலாவது உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவெறி, மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1961 : 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீடனின் கப்பல், கடலிலிருந்து மீட்கப்பட்டது.
1965 : டொமினிக்கன் குடியரசில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1967 : சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் தனது பரசூட்டை திறக்க முடியாமல் போனதால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணமொன்றில் உயிரிழந்த முதலாவது வீரராவார்.
1968 : மொரீசியஸ் ஐ.நாவின் அங்கத்துவ நாடாகியது.
1970 : சீனாவின் செய்மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்பட்டது.
1970 : பொதுநலவாய அமைப்பில் காம்பியா இணைந்தது.
1981 : முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது.
1990 : – டிஸ்கவரி விண்ணோடம், ஹபிள் விண்வெளி தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டு சென்றது.
2004 : லிபியாவுக்கு எதிராக 18 வருடங்களுக்குமுன் விதிக்கப்பட்ட பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியது.
2006 : நேபாளத்தில் மன்னருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களை அடுத்து, 2002 இல் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீள அமைக்க மன்னர் உத்தரவிட்டார்.
2005 : ஸ்னபி எனும் நாய் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதலாவது நாயாகியது.
2007 : பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
2013 : பங்களாஷில் 8 மாடி கட்டமொன்று இடிந்து வீழ்ந்ததால் 1129 பேர் உயிரிழந்தனர்.
2013 : யாழ் வலிகாமம் வடக்கில் 6371 ஏக்கர் (2578 ஹெக்டேயர் = 25.78 சதுர கி.மீ) பரப்பளவான காணிகளின் உரிமையாளர்களை அடையாளம் காண முடிவில்லை எனக் கூறி அக்காணிகளை அரசினால் சுவீகரிக்கப்படுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
0 Comments