Subscribe Us

header ads

வரலாற்றில் இன்று 24 - உலகில் நடந்தவைகள் என்ன?


1863 : கலி­போர்­னி­யாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெ­ரிக்க பழங்­கு­டிகள் 53 பேர் படு­கொலை செய்­யப்­பட்­டனர்.

1877 : ஓட்­டோமான் பேர­ரசு மீது ரஷ்யா போர் பிர­க­டனம் செய்­தது.

1908 : அமெ­ரிக்­காவின் லூசி­யா­னாவில் புயல் கார­ண­மாக 143 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1915 : ஆர்­மீ­னிய இனப்­ப­டு­கொலை: இஸ்தான்புலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ஆர்­மே­னி­யர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஏனையோர் நாட்­டை­விட்டு விரட்­டப்­பட்­டனர்.

1955 : இந்­தோ­னே­ஷி­யாவின் பாண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த 29 அணி சேரா நாடு­களின் முதலாவது உச்சி மாநாடு முடி­வுற்­றது. குடி­யேற்­ற­வாதம், இன­வெறி, மற்றும் பனிப்போர் ஆகி­ய­வற்றைக் கண்­டிக்கும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

1961 : 17ஆம் நூற்­றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீ­டனின் கப்பல், கட­லி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது.

1965 : டொமி­னிக்கன் குடி­ய­ரசில் உள்­நாட்டுப் போர் ஆரம்­பித்­தது.

1967 : சோயூஸ் 1 விண்­க­லத்தில் பய­ணித்த ரஷ்ய வீரர் விளா­டிமிர் கொமரோவ் தனது பர­சூட்டை திறக்­க­ மு­டி­யாமல் போனதால் உயி­ரி­ழந்தார். இவரே விண்­வெளிப் பய­ண­மொன்றில் உயி­ரி­ழந்த முத­லா­வது வீர­ராவார்.

1968 : மொரீ­சியஸ் ஐ.நாவின் அங்­கத்­துவ நாடா­கி­யது.

1970 : சீனாவின்  செய்­மதி டொங் ஃபாங் ஹொங் 1 ஏவப்­பட்­டது.
1970 : பொது­ந­ல­வாய அமைப்பில் காம்­பியா இணைந்­தது.

1981 : முத­லா­வது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறி­மு­க­மா­னது.

1990 : – டிஸ்­க­வரி விண்­ணோடம், ஹபிள் விண்­வெளி தொலைக்­காட்­டியை விண்­ணுக்குக் கொண்டு சென்­றது.

2004 : லிபி­யா­வுக்கு எதி­ராக 18 வரு­டங்­க­ளுக்­குமுன் விதிக்­கப்­பட்ட பொரு­ளா­தார தடையை அமெ­ரிக்கா நீக்­கி­யது. 

2006 : நேபா­ளத்தில் மன்­ன­ருக்கு எதி­ராக இடம்­பெற்ற கல­வ­ரங்­களை அடுத்து, 2002 இல் கலைக்­க­ப்பட்ட நாடா­ளு­மன்­றத்தை மீள அமைக்க மன்னர் உத்­த­ர­விட்டார்.

2005 : ஸ்னபி எனும் நாய் குளோனிங் முறையில் உரு­வாக்­கப்­பட்ட முத­லா­வது நாயா­கி­யது.

2007 : பலாலி இரா­ணு­வத்­தளம் மீது தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் விமா­னங்கள் தாக்­குதல் நடத்­தின.

2013 : பங்­க­ளாஷில் 8 மாடி கட்­ட­மொன்று இடிந்து வீழ்ந்­ததால் 1129 பேர் உயி­ரி­ழந்­தனர். 

2013 : யாழ் வலி­காமம் வடக்கில் 6371 ஏக்கர் (2578 ஹெக்­டேயர் = 25.78 சதுர கி.மீ)  பரப்­ப­ள­வான காணி­களின் உரி­மை­யா­ளர்­களை அடை­யாளம் காண முடி­வில்லை எனக் கூறி அக்­கா­ணி­களை அர­சினால் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வ­தற்­கான விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் வெளியிடப்பட்டது.

Post a Comment

0 Comments