Subscribe Us

header ads

பல சவால்களுக்கு மத்தியில் அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த நடாஷா பண்டுலுவவல வின் முயற்சி... எம்மவர்களுக்காக பாடு படுகிறார்...


பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை மக்களிடையே மாற்றத்தை கொண்டு வருவதற்கு 16 வயதுடைய யுவதி ஒருவர் முயற்சித்து வருகிறார்.
அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த நடாஷா பண்டுலுவவல (Natasha Panduwawala) என்ற யுவதியே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த இரண்டு வாரங்களாக நடாஷா தனது பெற்றோரின் நாடான இலங்கையிலுள்ள எலும்பியல் நோயாளர்களுக்கு உதவி பொருட்களை வழங்குவதற்காக நன்கொடை சேகரித்துள்ளார்.
இதுவரை, நடாஷா 150 ஊன்றுக்கோள், சக்கர நாற்காலிகளை சேகரித்துள்ளார். 200 உபகரணங்களை கப்பலில் ஏற்றுவதே நடாஷாவின் இலக்காகும்.
இலங்கை எலும்பியல் நோயாளர்களுக்கு நிதி சேகரித்தல் 2017 – என்ற பெயரில் நடாஷா வலைத்தளம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். அவர் எதிர்பார்க்கும் பொருட்கள் பட்டியலில் உள்ளவைகள் சமூகத்தின் பங்களிப்புடன் கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கின்றார்.
அறக்கட்டளையின் கடமையில் ஈடுப்பட்டிருக்காத போது, புதிதாக உருவாகிய நேஷனல் லத்தின் என்று அழைக்கப்படும் சங்கத்தில் இணைத் தலைவராக நடாஷா செயற்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் எதிர்கால வர்த்தக தலைவர்களுக்கான EHS முதலாவது கிளையில் இயக்குனர் மற்றும் தலைவராக பணியாற்றியுள்ளார். பாடகர்கள் மற்றும் நாடக நிகழ்ச்சி சம்மேளனத்தில் உறுப்பினராக செயற்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே செஸாபியேக் கல்லூரியில் மூன்று இரட்டை சேர்க்கை கற்கைகளை நிறைவு செய்துள்ளார்.
நடாஷா தன்னை பற்றி கூறிக் கொள்வதில் பெருமை கொள்ளவில்லை. இறுதியாக அவர் தனது குடும்பத்தினருடன் இலங்கை வந்திருந்த போது இலங்கை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு ஆரம்பித்துள்ளார். நடாஷாவின் உறவினர்கள் கொழும்பில் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையின் கிராமப்புறத்தில் மிகவும் ஏழ்மையில் வாழும் மக்களை பார்த்த அவருக்கு அந்த விடயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனது தாய் நாட்டிற்காக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார்.
“எனது அத்தை மகளிர் ஆதரவற்ற இல்லத்திற்கு என்னை அழைத்து சென்றார் என நடாஷா தெரிவித்துள்ளார். “நான் உண்மையில் அவர்களை சந்திக்க விரும்பினேன். இளம் வயதாக இருந்த போதே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் ஒருவரை நான் சந்தித்தேன். அவரிடம் ஒரு பிரம்பும் காணப்பட்டது. எனினும் நான் அவரது நடனத்தை பார்த்து மகிழ்ந்தேன் என நடாஷா குறிப்பிட்டுள்ளார்.
யாசகம் பெற்றவர்களை நான் பார்த்தேன். வயது வந்தவர்கள் மற்றும் சிறுவர்களை எல்லா இடத்திலும் பார்தேன்.
அங்கவீனமான கால்களுடன் பலரை பார்த்தேன். அவர்களால் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை என நடாஷா சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடாஷாவின் பெற்றோர் இலங்கையில் இருந்து சென்று அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் மக்களின் ஏழ்மை நிலையை பார்த்தவர் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என எண்ணியுள்ளார். அதற்கமைய ஊன்றுக்கோள் மற்றும் சக்கர நாட்காலிகளை சேகரித்து இலங்கைக்கு அனுப்புவதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்.
அதேபோல் மேலும் பல உதவி பொருட்களை வழங்குவதற்கு அவர் எதிர்பார்த்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. உதவ விரும்புபவர்கள் இந்த www.movementtoremember.org வலைத்தளத்தின் ஊடாக உதவி செய்ய முடியும் என நடாஷா குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments