இலங்கையின் சிங்கள சமூகத்தைப் பொருத்தவரையில் ஒரு அரச உத்தியோகம் என்பது அவர்களது மிகப்பெரிய இலக்கு, ஆனால் நம் முஸ்லிம் சமூகத்தில் அப்படியில்லை.நம்மவர்களுக்கும் இப்போது அரச பதவிகளைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வம் இருந்தாலும், அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வதில் எந்த ஆர்வமுமில்லை.
அதனால்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களின் அரச இயந்திரமும் பெரும்பாண்மையினரலாயே இயக்கப்படுகின்றது.
இலங்கையைப் பொருத்தவரையில் ஒரு நல்ல அரச பதவிக்கு நேரடியாகச் செல்வதென்றால் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் நிச்சயம் ஒரு பட்டப்படிப்பை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
நமது சமூகத்தைப்பொருத்தவரையில் திருப்தி அடையக்கூடிய ஒரே துறை ஆசிரியத்துறை மட்டும்தான். அதிலும் ஆண்களின் நிலை ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
மாணவிகள் என்றால் கலை மற்றும் விஞ்ஞானப் பிரிவில் கற்கவேண்டும்எ ன்றும்,மாணவர்கள் என்றால் வனிகம் மற்றும் கணிதம் ஆகிய பிரிவுகளில் உயர்தரம் கற்கவேண்டும் என்றும் ஒரு சம்பிரதாயம் நீண்ட நாற்களாகவே நம் சமூகத்தில் இருந்துவருகிறது.
கணிதம் வனிகம் ஆகிய துறைகளை மாணவர்கள் தெரிவுசெய்வதில் எந்தத் தவறுமில்லை.ஆனால் இன்றைய சூழலில்இ ந்தத்துறைகளில் கற்பதென்றால் இலங்கையின் பிரதான நகரங்களுக்கு மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.அதேபோல் இந்தத் துறைகளில் உயர்தரமுள்ள நகர்ப்புர பிரதான பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலையும் இருக்கிறது.
நகர்ப்புர பிரதான பாடசாலைகளில் கற்பதற்கு,பிரதான நகரங்களுக்கு மேலதிகவகுப்புகளுக்குச் செல்வதற்கு ஒரு மாணவனும் அவனது பெற்றோரும் ஒரு மிகப்பெரிய பணத்தொகையை முதலீடு செய்ய வேண்டி இருக்கிறது.
எனவே இந்தத்துறையில் மாணவர்கள் உயர்தரத்தில் காலடி வைக்கும்போது தனக்கு குறித்ததுறைகளில் நின்று நிலைக்க முடியுமா ? தனது பெற்றோருக்கு இதற்கான செலவினங்களை தாங்கமுடியுமா ? என்பது மாதிரியான கேள்விகளுக்கு சரியான பதில் இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் எல்லோரும் மெட்ஸ் செய்கிறார்கள் எல்லோரும் கண்டிக்கும் கொழும்புக்கும் க்ளாஸ் பாேகிறார்கள் என்று நாமும் அந்த அலையில் மாட்டிக் கொள்ளக்கூடாது.
இப்படிச் செல்லும் மாணவர்கள் ஆறுமாதத்திலேயே என்ன செய்யவதென்று தெரியாமல் திண்டாடுகிறார்கள்.சிலர் எப்படியாவது பரீட்சைக்கு தோற்றினாலும் மூன்று பாடங்களில் சித்தி அடையக்கூட முடியாமல் போய்விடுகிறது.
உயர்தரத்தில் மூன்று பாடங்களி்ல் சித்தியடையாமல் ஒரு வெளிவாரிப்பட்டப்படிப்பை மேற்கொள்ளவோ அதிகமான அரச பதவிகளுக்கான போட்டிப் பரீட்சைகளில் தோற்றவோ முடியாது.
இந்த நிலமையில் நிறைய இளைஞர்கள் நம் சமூகத்தில் இருக்கிறார்கள்.பின்னர் இலங்கையில் ஏதாவது ஒரு தொழில் செய்யத்தொடங்கிவிடுகிறார்கள் அல்லது எங்காவது ஒரு மத்திய கிழக்கு நாட்டுக்
ஏறிவிடுகிறார்கள்.
உண்மையில் இப்படியான மாணவர்கள் கலைப்பிரிவில் படித்து தமது முதல் டிக்கிரியை சரியாக பூர்த்தி செய்திருப்பார்கள் என்றால் மிக இலகுவாக ஒரு அரச உத்தியோகத்தைப் பெற்றிருக்க முடியும்.
அதேபோல் ஒரு ஆட்ஸ் டிகிரி இருந்தால்இ லங்கையின் நிறைய போட்டிப் பரீடசைகளுக்கு தோற்ற முடியும் அவற்றினூடாக மிகப்பெரிய அரச பதவிகளுக்குச் செல்லவும் முடியும்.
இலங்கையைப் பொருத்தவரையில் அதிகாமான சட்டத்தரணிகள், உயர்பதவிகளில் இருக்கும் நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களில் அதிகமானவர்கள் உயர்தரக் கலைப்பிரிவில் ஒரு கிரமாப்புர பாடசாலையில் எந்த மேலதிகமான செலவினங்களும் இல்லாமல் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள்.
இந்த வாய்ப்பை நம் மாணவர்கள் சரியாக பயன்படுத்துவதில்லை.இன்னும் சிலர் உயர்தரமே படிககாமல் நேரடியாக டிகிரி என்று சொல்லிக் கொண்டு தனியார் கல்வி நிலையங்களில் தமது காலத்தையும் பணத்தையும் வீணடித்துக் கொணடு இருக்கிறா்கள்.
இந்த தனியார் கல்வி நிலையங்கள், மேலதிக வகுப்பு நடத்தும் பிரபல ஆசிரியர்கள், உயர்தரத்தில் தமது பாடசாலையில் பெயரை பதிந்துவிட்டு களாஸ் போய் படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் பிரபல நகர்ப்புர பாடசாலைகள்இ வைகள் அனைத்துக்குள்ளும் நம் உயர்தர மாணவர்கள் சிக்கித்தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு பொருத்தமான, இலகுவான, செலவினங்கள் குறைந்த நல்ல வாய்ப்புகளை சரியாக இணங்காட்டி அதன்பாள் அவர்களை அழைத்துச் செல்லவேண்டியது சமூகத்தின் முன்னிற்கும் மிகப்பெரிய சவாலாகும்.
-Safwan Basheer-
0 Comments