மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை இனங்காண்பதற்கான புதிய இயந்திரம் ஒன்றை போக்குவரத்து பொலிஸாருக்கு அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வாகன சாரதிகள் மதுபோதையில் உள்ளனரா என்பதனை சுவாசத்தின் மூலமாக கண்ட றியும் செயற்பாட்டை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக ‘பிரேதலைஸர்’ என்ற இயந்திரமொன்று பிராந்திய போக்குவரத்து பிரிவினருக்கு பகிர்ந்தளிக்கவுள்ளன.
இந்த இயந்திரம் தொடர்பாக போக்குவரத்து பொலிஸாரை தெளிவுபடுத்தும் கருத்தரங்கொன்று நாளை கொழும்பு 11, ஒல்கொட் வீதியில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
0 Comments