Subscribe Us

header ads

முபாரக் மௌலவியின் கழிப்பறையில் பிரச்சினை இருந்தால கூட முஸ்லிம் காங்கிரஸையே குறை காண்பார்-ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அக்கீல் அர்ஷாத் தெரிவிப்பு

உலமாக் கட்சியின் தலைவரின் வீட்டில் மலசலகூடத்தில் குறைபாடு இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸையும் முதலமைச்சரையுமே குற்றம் கூறுமளவுக்கு அவரின் அரசியல் காழ்ப்புணர்வு மேலோங்கியுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அக்கீல் அர்ஷாத் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான நிதி வழங்கும் பொறிமுறை என்ன,அவர்களுக்குரிய அதிகாரங்கள் என்ன என்ற ஆரம்ப கட்ட அரசியல் அறிவு கூட இன்றி எவ்வாறு சில பௌத்த மதகுருமார் பௌத்த மதத்திற்கு இழுக்கை ஏற்படுத்திகுன்றனரோ அதேபோன்று உலமாக்கள் எனும் நம் சமூகத்தின் உயர்ந்த ஸ்தானத்தில வைத்து போற்றப்படுபர்களுக்கு  முபாரக் அப்துல் மஜீத் இழுக்கை ஏற்படுத்துவதாகவும் அக்கீல் அர்ஷாத் சுட்டிக்காட்டினார்.

ஏறாவூரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் அக்கீல் அர்ஷாத் இதனைக் குறிப்பிட்டார்,

கிழக்கு மாகாணத்தைப்  பொறுத்த வரையில் இன்று கல்வியில் பின்தங்கிய மாகாணமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதுடன்  அதற்கு அந்த மாகாணத்துக்கான நிதி வசதிகள் போதாமையும் அரசாங்கம் இதுவரை உரிய கவனம் செலுத்தாமையும் ஆகும் என்பதை முதலில் கிழக்கு மாகாணத்தில் ஒரு அரசியல் பிரதிநிதியாக தம்மைக் காட்டிக் கொள்ளும் முபாரக் மௌலவி தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்,

கிழக்கு முதலமைச்சர் மேலுள்ள காழ்ப்புணர்வில் மாகாணத்திற்கான நிதிகளை குறைப்பதற்கும்  அவற்றை தடுப்பதிலும் சில முஸ்லிம் அமைச்சர்களே  முயற்சிகளை முன்னெடுத்துவருவது சில சிங்களப் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்தப்பட்டமையை நாம் குறிப்பிடவேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் மேல் உண்மையான அக்கறையுள்ளவர்கள் போல் நீலிக்கண்ணீர் வடிக்கும் அவர்களுக்கு உண்மையாக கிழக்கு மக்கள் மீது அக்கறையிருந்தால் ஏன் அமைச்சரவையில் கிழக்கு முதலமைச்சர் மீது அவதூறு கூறி மாகாணத்துக்கான சலுகைகளை தடுக்க முற்பட வேண்டும்,

அது மட்டுமன்றி கடந்த வருடம்  மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி இதுவரை மாகாண சபைக்கு கிடைக்கவில்லை என்பதையும் அதற்கான பற்றுச் சீட்டுக்களை வைத்துக் கொண்டு இன்றும் முதலமைச்சர் நிதியமைச்சின் படிகளுக்கு ஏறிக் கொண்டிருக்கின்றார் என்பதை அறிவீரா அது மட்டுமன்றி இந்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட போதும் இதுவரை அதற்காக நிதியில் மாகாண சபைக்கு ஒரு சதம் கூட கிடைக்கப் பெறவில்லை என்பதாவது அரசியல்ஞானி முபாரக் மௌலவிக்கு தெரியுமா?

திருகோணமலை மாவட்டத்தில் எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் பாராளுமன்றத்தில் தினமும் கல்வியமைச்சரையும் பிரதமரையும் சந்திக்கின்றார்கள் அல்லவா அதன் போது அவர்களுக்கு இந்த நிலைமையினை சுட்டிக்காட்டி அதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கலாமல்லவா?

அல்லது கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான நிதி உரிய முறையில் கிடைக்கப் பெறுவதில்லை எனவே அந்த நிதியைப் பெற்றுத் தர வேண்டும்  என பாராளுமன்றத்தில் குரல் எழுப்பலாம் அல்லவா?

அவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக தானே திருகோணமலை மாவட்ட மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர் அவ்வாறாயின் அவர்கள் அந்த மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதில்லையா?

முபாராக் மௌலவி அமைச்சர் ரிஷாத்துக்கு வக்காலத்து வாங்குவதாக இருந்தால் அண்மையில் கிழக்கு மண்ணிற்கு  வந்து இங்குள்ள குடிசைகளை இல்லாமலாக்குவதாக கூறியிருந்தாரே முதலில் அவரின் வன்னி மாவட்டத்தில் உள்ள பாலைக்குழி மற்றும் கரடிக்குழி ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைகளில் வாழும் மக்களுக்கு முதலில் வீட்டு வசதிகளை வழங்கட்டும்.

ஆகவே வைக்கோற் பட்டறை நாய் போல தானும் ஒன்றும் செய்வதில்லை செய்பவர்களுக்கும் குறைகூறிக் கொண்டு திரியாமல் முதலில் மக்களுக்கு இயன்றவைகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்,

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்ய தம்மால் இயன்ற சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதுடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்க முடியுமானல் வழங்குமாறும் இல்லையென்றாலும் மஹிந்த ராஜபக்ஸவின் துதிபாடிக் கொண்டு அவர் பின்னால் வால் பிடித்து வாழ்வாங்கு வாழவேண்டும் என கேட்டுக் கொள்வதாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான அக்கீல் அர்ஷாத் கேட்டுக் கொண்டார்.

CM MEDIA-

Post a Comment

0 Comments