புத்தளத்தில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டி மூலம் குறித்த சிறுவனை புத்தளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த போதே மீட்டெடுத்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்திய பிரஜை ஒருவரே இந்த பிள்ளையை அழைத்துச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்ட இந்திய பிரஜை உட்பட பிள்ளையை அழைத்துச் சென்ற இரண்டு பெண்களும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய முச்சக்கர வண்டி சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களான பெண்கள் இருவரும், இந்திய பிரஜையும் வண்ணாத்திவில்லு பகுதியில் சிறுவனை மறைத்து வைத்திருந்தமை ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரதேசத்திலுள்ள பெண்ணொருவரால் வழங்கப்பட்ட தகவலிற்கு அமைய சந்தேகநபரான இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் சந்தேகநபர்களான இரண்டு பெண்களில் ஒருவரின் கணவரான குறித்த இந்திய பிரஜை, முச்சக்கர வண்டி மூலம் சிறுவனை புத்தளத்திற்கு கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments