பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகளான மரியம் மசூத் மற்றும் ஏர்ரோம் மசூத் இருவரும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தில் விமானிகளாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் மூத்தவரான மரியம் மசூத் ஏற்கனவே போயிங் -777 விமானம் ஓட்டுவதற்கான தகுதி பெற்றுள்ளார். தற்போது தங்கை ஏர்ரோம் மசூத்தும் போயிங் -777 ஓட்டுவதற்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தானில் முதன்முறையாக ஒரே நேரத்தில் போயிங் -777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தான்யல் கிலானி கூறுகையில், இதற்கு முன்பு சகோதரிகள் இருவர் ஒரே எடைபிரிவில் போயிங் -777 விமானம் ஒட்டியதாக முன்பு எங்கும் ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
0 Comments