Subscribe Us

கழுத்தளவு வெள்ளம்: தலைக்கு மேல் மகளை தூக்கிக் கொண்டு 5 கி.மீ. சென்ற தந்தை ; பாகுபலி க்ளைமேக்ஸ்


ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக அங்குள்ள கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பாலபாம் பஞ்சாயத்து, குடுமுசாரி பகுதியைச் சேர்ந்த பங்கி சதிபாபு (30) என்பவர் உடல்நிலை சரியில்லாத தனது 6 மாத மகளை காப்பாற்றுவதற்காக, கழுத்தளவு வெள்ளத்தில், தலைக்கு மேல் மகளை தூக்கிக் கொண்டு சென்றுள்ளார்.
கழுத்தளவு நீரில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பங்கி சதிபாபு சேர்த்திருக்கிறார். தனது உயிரையும் பொருட்படுத்தாது சதிபாபு மகளை தூக்கிக் கொண்டு சென்றதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments