Subscribe Us

header ads

பொத்துவில் கல்வி வலயம் தொடர்பில் அமைச்சர் ரிஷத்துக்கு பாராட்டுக்கள்

-    இர்ஷாத் றஹ்மத்துல்லா -


பொத்துவில் கல்வி வலயம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் பல்தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணமுள்ளன.அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்த முன்னாள் பொத்துவில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும்,கணியவள கூட்டுத்தாபனத்தின் தலைவரமான அப்துல் மஜீத் அவர்கள் இத தொடர்பில் தான் மாகாண சபை உறுப்பினராக இருந்த காலத்தில் இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை தொடர்பில் எடுத்துரைத்திருந்தார்.

இதனது அடுத்த கட்டமாக கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்கள அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான குழுவினர் அமைச்சில் சந்தித்து பொத்துவில் கல்வி வலயத்தின் அவசியத்தை வலியுறுத்திய போது,இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுப்பதகாவும்,அதற்கான பணிப்புரையினை தமது செயலாளருக்கு அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் உத்தரவிட்டார்.

அதே வேளை இந்த கல்வி வலயத்தின் மூலம் பிரதேசத்தில் உள்ள அனைத்து சமூகமும் நன்மையடையும் என்பதினால் இந்த வலயம் உருவாகுவதற்கு அனைவரினதும்,ஒத்துழைப்பினை நல்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் பகிரங்க வேண்டுகோள் ஒன்றினைவிடுத்திருந்தார்.

இதனடிப்படையில் கிழக்கு மாகாண ஆளுநர்,மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருக்கு இம்மாதம் 18 ஆம் திகதி அவசரக் கடிதமொன்றினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ளார்.

எது எவ்வாறாக இருந்தாலும்,சமூகத்தினதும்,மாணவ சமூகத்தினதும்,எதிர்காலம் தொடர்பில் ஆக்க பூர்வமான நடவடிக்கையெடுக்க எவர்முற்பட்டாலும்,அதற்கு தமது ஒத்தழைப்பினை வழங்குவது தான் மானட பண்பின் உச்சகட்டமாகும்.

அரசியல் அந்தஸ்த்துக்கள் என்பது அல்லாஹ்வின் புரத்தில் இருந்து வருகின்ற விடயமாகும்.இதனை நாம் துாய வடிவில் புரி்ந்து கொண்டு செயற்படுவதன் மூலம் அந்த இலக்கை அடைந்து கொள்ளமுடியும்,தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கான பொறுப்பற்ற முறையில் செயற்படுவது என்பது அங்கீகரிக்க முடியாதெதொன்று என்பதை புரிந்து கொண்டு,அகில இலங்கை மக்கள் காங்கிலரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எடுத்துள்ள இந்த முயற்சியின் பின்னால் நாங்களும் நின்று அதற்கு பங்களிப்பினை வழங்குகின்ற போது,அது சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்பது யதார்த்தமாகும்.

Post a Comment

0 Comments