-இர்சாத் ரஹுமத்துல்லாஹ்-
கல்பிட்டி அல்-அக்ஷா தேசியப் பாடசாலைக்கு சகல சகல வசதிகளுடனும் கூடிய கேட்போர் மண்டபம் ஒன்றினை அமைத்துக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் இணக்கம் தெரிவித்துள்ளார்.
கல்பிட்டி பாடசாலை அபிவிருத்தி சங்கமும்,புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதம அமைப்பாளர் அலிசப்ரி ஆகியோர் இது தொடர்பில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் பாடசாலையின் தேவை தொடர்பில் வேண்டுகோள் ஒன்றினை முன் வைத்திருந்தனர்.
இதனையடுத்து அமைச்சர் றிசாத் பதியுதீன் அண்மையில் கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களை கல்வி அமைச்சில் சந்தித்து கல்பிட்டி அல்அக்ஷா தேசிய பாடசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய கேட்போர் மண்டபம் ஒன்றினை அமைத்துதருமாறு கோறிக்கையினை முன் வைத்தார்.
அது தொடர்பில் தமது கவனத்தை செலுத்துவதகாவும்,உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைக்கான பணிப்பாளருக்கு இது தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
0 Comments