Subscribe Us

header ads

மானஸ் தீவு முகாம் மூடப்படுகின்றது...


இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மானஸ் தீவு முகாம் மூடப்படவுள்ளது.

இதற்கு அவுஸ்திரேலியாவும் இணங்கி இருப்பதாக, பப்புவா நியுகினியின் பிரதமர் பீற்றர் ஓ நெயில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் பப்புவா நியுகினியின் அரசியல் யாப்புக்கு எதிரானது என்று ஏற்கனவே அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதன்படி இதனை மூடுவதற்கு முயற்சித்த போதும், அவுஸ்திரேலிய அரசாங்கம் எதிர்ப்பு காட்டி வந்தது.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீற்றர் டட்டனை தாம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி, இதனை மூடுவதற்கு இணங்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அங்குள்ள ஈழ அகதிகள் அடுத்தகட்டமாக என்ன செய்யப்படுவார்கள்? என்பது குறித்த தகவல்களை அவர் வழங்கவில்லை.

Post a Comment

0 Comments