பிரபல சமூக, ஊடக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம் கடந்த காலாண்டில் எதிர்பார்த்த வருவாயைவிட அதிக வருமானம் ஈட்டியுள்ளது.
இது, கடந்த வருடம் இந்த காலப்பகுதியைவிட நூற்றுக்கு 186 சதவிகதிமாக
அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வருமானம், 2015 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதியைவிட 719 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த முன்னேற்றம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவிக்கையில், நேரடி காணொளி அம்சம் உட்பட்ட காரணங்களால் இந்த சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தாற்போது அனைத்து சேவைகள் தொடர்பாக காணொளி தொழில்நுட்பம் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருவதால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தள்ளார்.


0 Comments