Subscribe Us

header ads

புத்தளம் நகர சபையினால் ஏற்பாடு செய்த விழிப்பூட்டல் பேரணி படங்கள்

போதை பொருள் பாவனையை ஒழித்துக்கட்டி போதை பொருள் இல்லாத நாடாக இந்த நாட்டினை உருவாக்குவோம் எனும் தொணிப்பொருளில் புத்தளம் நகர சபையினால் ஏற்பாடு செய்த பொது மக்களை விழிப்பூட்டச்செய்வதற்கான விழிப்பூட்டல் பேரணி மற்றும் கையெழுத்து வேட்டை, திங்கட்கிழமை (04.௦07.2016) காலை புத்தளம் நகர மத்தியில் இடம்பெற்றது.

போதையேற்ற நாடாக இந்த நாட்டை உருவாக்குவோம் என்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவுக்கு ஆதரவாக இந்த ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

புத்தளம் நகர சபையின் செயலாளர் கே.பீ. சந்தன குமார, பிரதம நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், பொது சுகாதார பரிசோதகர் என். சுரேஷ் உள்ளிட்ட நகர சபை நிர்வாகிகள் இணைந்து இந்த ஊர்வலத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்.

புத்தளம் நகர சபையின் ஊழியர்கள் போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கையொப்பங்களை இட்டு பொது மக்களிடம் கையொப்பங்களை வாங்கும் நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர்.

ஜனாதிபதியின் இந்த திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புத்தளம் நகரின் பல்வேறு முச்சந்திகளில் பொது மக்கள் ஒன்று கூடி இனம், மதம் பாராது தமது கையொப்பங்களை ஆர்வத்தோடு இட்டனர்.



























Post a Comment

0 Comments