அபு அலா -
அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான 20 நாள் பயிற்சி பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு நாளை (01) சீனா பயணமாகிறார்.
இம்மாதம் 30 ஆம் திகதி முதல் – ஜுலை 20 ஆம் திகதி வரை, சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் நடைபெறும் இந்தப் பயிற்சிப்பட்டறையில் இலங்கையிலிருந்து 05 பேர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு கலந்துகொள்ளும் ஐவரில் வைத்தியர் நக்பர் மட்டுமே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவரே இக்குழுவுக்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்கின்றமையும் இந்தக் குழுவிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நடைபெறும் மேற்படி பயிற்சி நெறியில், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்த பல வைத்தியர்கள் கலந்து கொள்கின்றனர். வைத்தியர் கே.எல்.எம். நக்பரை இந்தசீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறையொன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவத் திணைக்களம் இதற்கு சிபார்சு செய்திருந்தமையும் விஷேட அம்சமாகும்.
சுகாதார பிரதியமைச்சரின் இணைப்பு மருத்துவ உத்தியோகத்தராகவும், நிந்வூர் தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகின்ற வைத்தியர் கே.எல்.எம்.நக்பருடன் ஏனைய 4 பேரின் பெயர்களை – சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் சிபாரிசு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments