அரநாயக கபரகல மலைப் பகுதியில் சற்று முன்னர்ம ண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ அமைப்புக்கும் இது தொடர்பில் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
என்றாலும் ஏற்கனவே அப்பிரதேசத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


0 Comments