Subscribe Us

header ads

எதுவுமே செய்யாமல் இருக்கும் போட்டி


எது­வுமே செய்­யாமல் இருக்கும் போட்­டி­யொன்று தென் கொரி­யாவில் கடந்த வாரம் நடை­பெற்­றது. மன அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வது, மூளைக்­கான வேலைப்­ப­ளுவை குறைத்தல் ஆகி­ய­னவே இதன் நோக்­க­மாகும்.   

தலை­நகர் சியோலின் பூங்கா வொன்றில் கடந்த ஞாயி­றன்று நடை­பெற்ற இப்­ போட்­டியில் சுமார் 60 பேர் பங்­கு­பற்­றினர். இவர்கள் மேற்­படி பூங்காவில் 90 நிமிட நேரம் இருக்க வேண்டும்.

ஆனால், பேசவோ, சாப்­பி­டவோ, உறங்­கவோ கூடாது. ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்­புக்கில் அரட்­டை­ய­டிக்­கவும் முடி­யாது.


உண்­மையில் எந்­த­வொரு இலத்­தி­ர­னியல் சாத­னங்­க­ளையும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு போட்­டி­யா­ளர்கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.   

“உங்கள் மூளைக்கு ஓய்­வ­ளி­யுங்கள்” எனும் தொனிப்­
பொ­ருளில் நடை­பெற்ற இப்­ போட்டி “ஸ்பேஸ் அவுட்” என அழைக்­கப்­ப­டு­கி­றது.   


2014 ஆம் ஆண்டு உள்ளூர் கலை­ஞர்கள் சில­ரினால் ஒரு கலை நிகழ்­வாக இந்­ நி­கழ்ச்சி நடத்­தப்­பட்­டது.

தற்­போது இது ஒரு போட்டி நிகழ்­வாக நடத்­தப்­ப­டு­கி­றது. கடந்த ஞாயி­றன்று சியோல் நகர சபை அனு­ச­ர­ணை­யுடன் இப்­போட்டி நடை­பெற்­றது.“ஸ்மார்ட்­போன்கள், தொலைக்­காட்சி, கணினி ஆகி­ய­வற்­றி­லி­ருந்து எமது மூளை­ககு அதிக தக­வல்­களை அனுப்­பாமல் ஓய்வில் இருக்க வாருங்கள் என அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதற்­காக சுமார் 1500 பேர் இணை­யத்­தளம் மூலம் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். தென் கொரி­யாவின் 5 கோடி மக்­களில் சுமார் 80 சத­வீ­த­மானோர் ஸ்மார்ட்­போன்­களை வைத்­தி­ருக்­கின்­றனர்.

அங்கு அனைத்தும் டிஜிட்டல் மய­மா­கி­வ­ரு­வது ஒரு பிரச்­சி­னை­யாக உரு­வா­கி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தென் கொரி­யாவில் ஸ்மார்ட்போன் பயன்­ப­டுத்­து­ப­வர்கள் சரா­ச­ரி­யாக தினமும் 4 மணித்தியாலங்கள் டுவிட் செய்தல், அரட்டையடித்தல், இலத்திரனியல் கேம் விளையாடுதல் போன்றவற்றில் செலவிடுகின் றனர் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.     

Post a Comment

0 Comments