எங்கே செல்கின்றோம் நாம்...!!
சவுத் ஆப்ரிக்காவில் ஆரம்பித்த எமது கல்முனை நகரின் அபிவிருத்தி பின்னர் ஜப்பான் சுனாமியில் சிக்குண்டு அதன் பின்னர் ஜெர்மன் குண்டுவெடிப்பில் மயிரிழையில் உயிர் தப்பிப்பிழைத்து தற்பொழுது துருக்கியை சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னும் எத்தனை நாடுகளுக்கு செல்லப்போகுதோ அந்த இறைவனுக்குதான் வெளிச்சம்.
நாட்டுக்கு நாடு பேசப்படும் எமது கல்முனை நகரின் அபிவிருத்தி இதுவரையில் எமது பாராளுமன்றத்திலோ, மாகாண சபையிலோ ஏன் நமது சாணக்கிய தலைவரின் பொறுப்பில் உள்ள நகர அபிவிருத்தி அமைச்சுக் காரியாலயத்திலேயோ பேசப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும் இதனை யாரும் மறுக்கவே முடியாது.
காலத்துக்கு காலம் என்ன நடந்தாலும் நமது கல்முனை மண் ஈன்றெடுத்த போராளிகள் “ஆ” வென்று கொட்டாவி விட்டு தூங்கினதுதான் மிச்சம். அடிக்கடி கூட்டம் நடப்பதை தவிர கண்ட அபிவிருத்திகள் ஒன்றுமில்லை என்பதுதான் தற்போதைய உண்மைநிலை.
கல்முனை மாநகரில் தேங்கிக்கிடக்கும் திண்மக் கழிவுகளை(குப்பைகளை) அகற்றினாலே போதும் அதுவே எமது கல்முனை நகருக்கும் மக்களுக்கும் செய்யும் மாபெரும் அபிவிருத்தி.
இதுவே சாதாரண குடிமகனின் அங்கலாய்ப்பு...!!
-Mohamed Kamil-


0 Comments