Subscribe Us

header ads

எச்சரிக்கை விடுத்தவுடன் மக்கள் வெளியேற வேண்டும்! - கடற்படை பேச்சாளர்


அனர்த்தம் ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் எச்சரிக்கைவிடுத்தவுடன் குறித்த இடத்திலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையினை கடற்படை அதிகாரிகள்; விடுத்துள்ளனர்.
அவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டும் குறித்த இடத்திலிருந்து வெளியேறாத மக்களேஅனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப்பேச்சாளர் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வெள்ளநீரால் சிக்குண்டவர்களை மீட்பதற்கு இராணுவம் கடும் பிரயத்தனங்களைசெய்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை திடீர் அனர்த்தங்கள் தொடர்பில் கடற்படையினர் அலுவலக இலக்கமான0112445368,0112-212230,0112-212231 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறுகடற்படை ஊடகப் பேச்சாளர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments