Subscribe Us

header ads

காஷ்மீர் மாநில ஹந்த்வாரா நகர மார்க்கெட்டில் மாணவியை தாயின் கண் முன்னே சீரழித்த காஷ்மீர் ராணுவம்!


காஷ்மீர் மாநில ஹந்த்வாரா நகர மார்க்கெட்டில் உள்ள பொது கழிப்பறையில் கடந்த செவ்வாய்கிழமை அன்று(12-04-16) 16 வயது மாணவி உள்ளே சென்றுள்ளார், அருகிலுள்ள ராணுவ சோதனை சாவடியில் இருந்து நோட்டமிட்ட வீரர் ஒருவன் உள்ளே சென்று மாணவியிடம் தவறாக நடந்து உள்ளான்.

NDTV எடுத்த நேர்காணலில் , இந்த சம்பவத்தை தான் நேரில் பார்த்ததாகவும் மாணவியின் தாய் கூறி கதறி அழுதார். என் மகளின் அழுகை குரலைக்கேட்ட வாலிபர்கள் தங்கள் சகோதரிக்கு நடந்ததை போல் உதவ ஓடி வந்தனர் ஆனால் அவர்கள் மீது துப்பாக்கி சுடு நடத்தி இதுவரை 5 பேர்களை கொன்றுள்ளது காஷ்மீர் ராணுவம்.

அந்த மாணவியை சம்பவம் நடந்த உடனே காவல்துறை அழைத்து சென்று உள்ளூர் வாலிபர்கள் முறைகேடாக நடந்ததாகவும் ராணுவம் தவறு செய்யவில்லை என கட்டயாப்படுத்தி வாக்குமுலம் பெறப்பட்டு விடியோ எடுத்து இணையதளத்தில் பரப்பி உள்ளனர்.

மாணவியை வெளியே விட்டால் உண்மையை சொல்லி விடுவாள் என ஐந்து நாட்களாக சட்ட விரோதமாக தந்தையுடன் கைது செய்து அடைத்து வைத்துள்ளது காஷ்மீர் காவல்துறை.

மேலும் மாணவியின் தாயை ஐந்து நாட்களாக பார்க்கவும் அனுமதி அளிக்கவில்லை. பத்திரிக்கைக்கு எந்த செய்தியும் அளிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இன்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பேட்டி எடுத்ததாக NDTV ஊடகம் கூறியுள்ளது.




- அபூஷேக் முஹம்மத்

Post a Comment

0 Comments