வீரகெடிய - ஹகுரவெல - மெதகொடை பிரதேசத்தில் மருத்துவர்களின் அலட்சியத்தினால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி தங்காலை மருத்துவ மனையில் குறித்த குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு எற்பட்ட ஒரு வகை நோய் நிலை காரணமாக 31 ஆம் திகதி கராப்பிடிய மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து கராப்பிடிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
குறித்த குழந்தையின் தாயார், தனது குழந்தை தொடர்பில் எவ்விதமான அவதானமும் மருத்துவர்கள் செலுத்தவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.
பின்னர் கடந்த 14 ஆம் திகதி குழந்தை உயிரிழந்துள்ளது.
மருத்துவர்களின் அலட்சிய போக்கினால் குழந்தை உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அறியவந்துள்ளது.
-hiru-
0 Comments