இந்தியாவின் பல பிரதேசங்கள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மஹாராஸ்டிராவும் இதற்கு விதிவிலக்கல்ல.
அங்கும் பல பகுதிகள் குடிநீருக்கு கடும் தட்டுப்பாட்டு நிலவுகின்றது.
இந்நிலையில் மஹாராஸ்டிராவின் , லாதூரைச் சேர்ந்த மதீன் பாய் என்ற நபர் தினசரி 10,000 லீற்றர் குடிநீரை தனது பிரதேசவாசிகளுக்காக வழங்கி வருகின்றார்.
இது தொடர்பான தகவல் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளதுள்ளதுடன் அவருக்கு பாராட்டும் குவிந்து வருகின்றது.
மதீன் பாய் தனது ஆழ்துளை கிணற்றிலிருந்தே அனைவருக்கும் நீர் விநியோகம் செய்து வருகின்றார்.
கடந்த 3 மாதங்களாக அவர் இதனை செய்து வருகின்றார். தனது நீர் நிறைவடைந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது , “நானும் குடத்துடன் நீர் தேடிச் செல்வேன்” என்கிறாராம் அவர்.
இன , மத பாகுபாடின்றி அனைவருக்கும் அவர் நீர் வழங்கிவருவதுடன், அப்பிரதேச மக்கள் அவரை கொண்டாடிவருகின்றனர்.
கணித பாட ஆசிரியரான அவர், தனது சேவை தொடர்பில் பெரிதாக விளம்பரம் தேட விரும்பாத ஒரு நல் உள்ளம் கொண்டவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 Comments