Subscribe Us

header ads

பாகிஸ்­தானில் 4 ஆண­ழ­கர்கள் உயி­ரி­ழந்­ததன் எதி­ரொ­லி­யாக ஆண­ழகர் போட்­டிக்கு தடை



பாகிஸ்­தானில் 4 ஆண­ழ­கர்கள் உயி­ரி­ழந்­ததன் எதி­ரொ­லி­யாக ஆண­ழகர் போட்­டி­களை நடத்­து­வ­தற்கு அந்­நாட்டு அரசு தடை விதித்­துள்­ளது.

உடலைக் கட்­டுக்­கோப்­பாக வைத்துக் கொள்­ளவும் போட்­டிகளில் வெற்றி பெறவும் பல குறுக்கு வழி­களை வீரர்கள் பயன்­ப­டுத்­தி­யதால் பாகிஸ்­தானில் கடந்த 17 நாட்­களில் 4 ஆண­ழ­கர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

உடலை கட்­டுக்­கோப்­பாக வைப்­ப­தற்­காக அதிக அளவில் ஸ்டீராய்டை பயன்­ப­டுத்­தி­யதன் கார­ண­மா­கவே அவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர் என தெரி­ய­வந்­துள்­ளது.

கடந்த தெற்­கா­சிய ஆண­ழகர் சம்­பி­யன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற ஹமீட் அலி மற்றும் உமியுன் குர்ஹாம் ஆகியோர் இந்த மாதத்தின் தொடக்­கத்தில் உயி­ரி­ழந்­தனர். தொடர்ந்து அடுத்த வாரத்­தி­லேயே மிஸ்டர் பாகிஸ்தான் பட்டம் வென்ற அர்ஷர் உயி­ரி­ழந்தார். மேலும் மற்­றொரு மிஸ்டர் பாகிஸ்தான் பட்டம் வென்ற மொஹமட் ரிஸ்வான் கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments