Subscribe Us

header ads

ஞானசார தேரரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை எதிர்வரும் செப்டெம்பர் 13ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இரண்டாவது முறையாகவும் அறிவிப்பாணை விடுத்துள்ளது.

மாலபே தலாஹேன பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றை தாக்கி சேதப்படுத்திய சம்பந்தம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் இருந்து இவர்களை விடுதலை செய்த தீர்ப்பை ரத்துச் செய்துவிட்டு, தண்டனை வழங்குமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பாணையை விடுத்திருந்தது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனு நீதியரசர்கள் மாலினி குணரட்ன, தேவிகா டி லிவேரா தென்னகோன், ஆகியோர் முன்னிலையில் ஆராயப்பட்டது.

Post a Comment

0 Comments