மாத்தறை தெவிநுவர பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியில் சுமார் 11 அடி நீளமான முதலையொன்று பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதலை கடலில் இருந்து தரைக்கு வந்திருக்கலாமென பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றன.
மேலும் முதலையை பிடிக்கச் சென்ற நேரத்தில் பிரதேச வாசியை முதலை தாக்கியுள்ளது.
தாக்குதலுக்குள்ளான பிரதேச வாசி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பிரதேச வாசிகளும் இணைந்து அம் முதலையை பிடித்ததோடு பாதுகாப்பாக மீண்டும் அம்முதலையை விடுதலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
0 Comments