Subscribe Us

header ads

சுகாதார அதிகாரிகளுக்கு மயக்க ஊசியை செலுத்த முயற்சி - ஒருவர் கைது


குடி போதையில் இருந்த நான்கு நபர்கள் , குளியாப்பிட்டிய - கிரியுல்ல - நாராங்கொடை பிரதேசத்தில் நாய்களுக்கு மயக்க ஊசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளை தாக்கி  குறித்த மயக்க ஊசியை  அவர்களுக்கு  உட்செலுத்த முயற்சித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிரதேச கால்நடை அதிகாரிகளின் அறிவித்தலுக்கு அமைய தேசிய நாய் கருத்தடை பிரிவில் பணிபுரியும் இந்த  அதிகாரிகள் இருவரும் பிரதேசங்களில் உரிமையாளர் இல்லாமல் சுற்றித்திரியும் நாய்களை கருத்தடைக்காக மயக்க ஊசி செலுத்தும் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது அங்கு வந்த இந்த நபர்கள் குறித்த அதிகாரிகளை தாக்கி அவர்களுக்கு குறித்த மயக்க ஊசியை உட் செலுத்துவதற்கு முயற்சித்துள்ளதாக கால் நடை அதிகாரி உபுல் சாகரதிலக எமது செய்திப்பிரிவிற்கு தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments