நாளைய தினம் இடம்பெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுக்கு தமக்கு இதுவரையில் அழைப்பு கிடைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி விகாரையில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.
அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக கட்சியைச் சார்ந்த எவரும் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்தார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படவுள்ளதாக வெளியான செய்தி குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தமிழில் பாடவேண்டும் என யாரும் வலியுறுத்த வில்லை.
கோடிக்கணக்கான தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டிலும், இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் ஒரே மொழியில்தான் தேசிய கீதம் பாடப்படுகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் பாடப்படுமானால் இலங்கையில் அதனை அமுல்படுத்தலாம்.
ஆங்கில மொழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தமிழையோ, சிங்களத்தையோ சரியாக உச்சரிக்க முடியாது.
நாங்கள் ஆங்கிலத்தில்தான் தேசிய கீதம் பாடவேண்டும் என கோரிக்கை விடுப்பார்களாயின் என்ன செய்வது.
எதிர்காலத்தில் அராபி மொழியிலும் இலங்கையின் தேசிய கீதத்தை பாடவேண்டும் என கேட்பார் என்பதில் சந்தேகமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பதிலில் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்தியாவை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகவே இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments