Subscribe Us

header ads

மார்பு கச்சைகள், சிறிகொத்தாவில் வீசப்பட்டுள்ளன

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பெண் ஆதரவாளர்களின் மார்புக் கச்சைகள் கழற்றப்பட்டு, அவையாவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் வீசப்பட்டுள்ளன. அவ்வாறான செயற்பாட்டுக்கு இனிமேலும் இடமளிக்கபோவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

கூட்டு எதிரணியின் முதலாவது அதிகார சபைக்கூட்டம்  கலமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments