Subscribe Us

header ads

நுரைச்சோலை மின்நிலையத்திலிருந்து மேலதிக மின்சாரம்

தேசிய மின்சார கட்டமைப்புக்குள் இந்த வாரத்தினுள் மேலும் 300 மெகாவோட் மின்சாரத்தினை நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் சக்திவலுத்துறை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நுரைச்சோலை அனல் மின்நிலையத்திலிருந்து தேசிய மின்சார கட்டமைப்புக்கு 600 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்படுகின்ற நிலையில், மேலும் எதிர்காலத்தில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து 900 மெகாவாட் மின்சாரத்தினை பெற்று தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படும்.

இதன்மூலம் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments