உலகிலேயே மிகப் பெரிய நீல மாணிக்க கல்லாக கருத்தக்கூடிய மேலும் ஒரு மாணிக்க கல், எலஹெர பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணிக்க கல்லானது பேருவளை மாணிக்க கல் வியாபாரிக்கு கிடைத்துள்ளது.
இந்த நீல மாணிக்க கல்லானது 2 ஆயிரத்து 476.66 கெரட் நிறையுடையது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது 482 கிராம்களாகும்.
இதற்கு முன்னர் இந்நாட்டு நபர் ஒருவரினால் கொள்ளவனவு செய்யப்பட்ட நீல மாணிக்க கல்லின் நிறை 281 கிராம் ஆகும்.
அந்த நீலக்கல்லின் நிறை ஆயிரத்து 404 கெரட்களாகும்.
தற்போது கிடைக்கப்பெற்றுள்ள கல் அதைவிட சுமார் இருமடங்கு அதிகமானதாகும்.
-HIRU-

0 Comments