டிரைவர் இல்லாமல் ஓடும் கார்கள், பகுதிநேரம் கம்ப்யூட்டரால் இயக்கப்படும் தானியங்கி லாரி போன்ற கண்டுபிடிப்புகளில் உலக நாடுகள் தீவிரம்காட்டி வரும் நிலையில் டிரைவர் இல்லாமல் ஓடும் பஸ் ஒன்றை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த இயந்திரப் பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் சப்தமில்லாமல் உருவாக்கி, வெள்ளோட்ட பரிசோதனையிலும் வெற்றி கண்டுள்ளனர்.
ஆறு பயணிகளுடன் மணிக்கு எட்டு கிலோமீட்டர் வேகத்தில் நடைபெற்ற இந்த சோதனை வெள்ளோட்டம் ஒரு ஆரம்பகட்ட முயற்சிதான். விரைவில் ஆறு கிலோமீட்டர் கொண்ட வேகனிங்கன் நகர வழித்தடத்தில் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் வகையில் இந்த ‘விபாட்’ பஸ்கள் தரம் உயர்த்தப்படும் என இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வெள்ளோட்ட காட்சியை பார்க்க...


0 Comments