எதிர்வரும் வருடம் அதாவது (2016) யில் தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரித்துள்ளார்.
இதையடுத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலில் திகாமடுள்ள மாவட்டத்தில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தனித்து களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும், அதிலும் குறிப்பாக கல்முனை மாநாகரில் தற்போதைய ஆட்சியில் உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் இருந்து கைப்பற்றி புதிய ஆட்சி ஒன்றினை கொண்டுவருவதே எமது பிரதான நோக்கம் எனவும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான அஹமட் புர்கான் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
0 Comments