கிழக்கு ஜேர்மனியில் உள்ள Jahnsdorf என்ற நகரில் கடந்த வியாழக்கிழமை மாலை அகதிகளை இடமாற்றும் பணி நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், சுமார் 50க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அகதிகள் முகாமிற்கு ஒரு பேருந்து சென்றுகொண்டு இருந்துள்ளது.
அப்போது, சாலையின் குறுக்கே வந்த சுமார் 6 பேர் அடங்கிய குழுவினர் பேருந்தை மறித்து தாக்க தொடங்கியுள்ளனர்.
பேருந்திற்குள் அகதிகள் அச்சத்தில் இருந்த நிலையில், பேருந்தை நோக்கி அந்த கும்பல் கல்வீச்சு நடத்தியுள்ளது. மேலும், சிலர் பட்டாசுகளை கொளுத்தி பேருந்து மீது வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பேருந்தின் ஓட்டுனருக்கு காலில் காயம் ஏற்பட்டதுடன் பேருந்தும் பெரும் சேத்ததிற்கு உள்ளானது.
சாலையில் நடந்த இந்த வன்முறை தாக்குதலால் அச்சமடைந்த அகதிகள், குறிப்பிட்ட அந்த அகதிகள் முகாமிற்கு சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என கவலை தெரிவித்தனர்.
இதனால், அகதிகளை வேறொரு முகாமிற்கு அதிகாரிகள் பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய Kathleen Doetsch என்ற பொலிஸ் அதிகாரி, சாலையில் பேருந்து வந்துகொண்டு இருந்தபோது எதிர்பாராமல் ஒரு கும்பல் தாக்க தொடங்கியது.
எனினும், திறமையாக செயல்பட்ட ஓட்டுனர், அகதிகளுக்கு மேலும் ஆபத்து ஏற்படாத வண்ணம் அங்கிருந்து லாவகமாக தப்பி வந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அகதிகளுக்கு எதிராக வன்முறை அடிக்கடி நிகழ்ந்து வருவதால், பேருந்தில் வந்த அகதிகளை பாதுகாப்பான முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
0 Comments