
தற்போது வடபுல முஸ்லிம்களும்,சவால்களும் என்னும் தலைபை்பில் நேற்று வவுனியாவில் இடம் பெற்ற கலந்துரையாடலொன்றின் போது இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது –
வடக்கில் காணப்பட்ட அச்ச நிலை பல்வேறு இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.அவை இழக்கப்பட்டவை.இதனால் எத்தனையோ அசம்பாவிதங்களை மக்கள் அனுபவிக்க நேரிட்டது.இந்த இறந்த கால தளத்திலிருந்து நாம் புதிய பாதையினை நோக்கி நகர வேண்டியுள்ளது.வடக்கு என்பது முஸ்லிம்களின் பாரம்பரிய பூமியாகும்.முஸ்லிம்களை வந்தேறு குடிகளாக பார்ப்பதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று பொதுமக்கள் தரப்பிலிருந்து பல்வேறு முறைப்பாடுகள் எமக்கு வருகின்றன.குறிப்பாக சில அரச அதிகாரிகள் தொடர்பில்,இன ரீதியான செயற்பாடுகளில் அவர்கள் செயற்படுவதாக,இப்படிப்பட்டவர் களிடத்தில் நாம் அன்பாக கேட்பது,எல்லா சமூக மக்களையும் ஒரே மாதிரியாக பாருங்கள் என்று,இந்த பிரிவினை தான் எமக்கு அழிவினை ஏற்படுத்தியது,மீண்டும் அவ்வாறானதொரு நிலையினை தோற்றுவிக்காதீர்கள்.
யுத்தத்தால் நாம் எல்லோரும் பாதிக்கப்பட்டோம்.இதனது இழப்புக்களினதும்,அழிவுகளினதும் வேதனைகளை நாங்கள் நன்கு உணர்ந்துள்ளோம்,இந்த நிலையில் எமது மாவட்டத்தினதும்,மக்களினதும் நலனை மையப்படுத்தி எமது பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இதற்காக நாம் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது.இந்த சந்தரப்பத்தை நாம் பயன்படுத்தாமல் விலகி செல்வோமெனில் வருங்கால சமூகம் எம்மை இகழ்ந்து கொண்டிருக்கும் என்பதை ரெிவித்துக்கொள்ளவிரும்புகின்றே ன் என்றும் இதன் போது அப்துல் பாரி கூறினார்.
-Irshath Rahmathullah-
0 Comments