Subscribe Us

header ads

தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்தது கெம்பியா: காரணம் இதோ!

மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்த கெம்பியா, தற்போது தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கெம்பியாவில் சுமார் 18 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதில் 95 சதவிகிதம் பேர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தர்கள். இந்நாடு இதுவரை மதச்சார்பற்ற நாடாக இருந்து வந்தது. 

இந்நிலையில், இந்த நாட்டை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதாக அதன் ஜனாதிபதி யாஹ்யா ஜாம்மே அறிவித்துள்ளார். காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டும், அதன் தாக்கம் இன்னும் மறையவில்லை என்றும், இதனால் தான் இந்நாட்டை இஸ்லாமிய நாடாக அறிவித்ததாகவும் அதிபர் தெரிவித்துள்ளார். 

மேற்கத்திய நாடுகளுடன் பொருளாதார உறவுகள் கடந்த சில ஆண்டுகளில் குறைந்து விட்டதாகவும், இதனால் ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தொடர்பை இந்த நாடு இழந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments