Subscribe Us

header ads

சென்னா தேங்காய்ப்பால் குழம்பு

தேவையானபொருள்கள் :  

வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம் 
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி  
தனியாதூள் - 3 மேஜைக்கரண்டி  
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி  
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி  
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி  
உப்பு - தேவையானஅளவு  
தேங்காய் துருவல் - 100 கிராம்) 

அரைக்க :  

கொத்தமல்லித்தழை - சிறிது  
தக்காளி - 1 

தாளிக்க :  

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி  
பட்டை - சிறிய துண்டு  
கிராம்பு -1  
வெங்காயம் - 1/4 பங்கு  
கறிவேப்பிலை - சிறிது 

செய்முறை : 

* கொண்டக்கடலையை தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்து பிறகு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.  

* வெங்காயத்தை பொடிதாக நறுக்கி வைக்கவும். 

* தக்காளி, கொத்தமல்லித்தழை இரண்டையும் மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.  

* தேங்காய் துருவலுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கெட்டியாக தேங்காய் பால் எடுத்து தனியாக வைக்கவும்.  அடுத்தது அதே தேங்காயுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.  

* ஒரு பாத்திரத்தில் இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால், அவித்து வைத்துள்ள சென்னா, மிளகாய்த்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள தக்காளி கலவை, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு எல்லாவற்றையும் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.  

* மசாலாவாடை போனதும் முதல் தேங்காய்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.  

* அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம் போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். 

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். 


* சுவையான சென்னா தேங்காய்ப்பால் குழம்பு ரெடி.

Post a Comment

0 Comments