படுகொலை என நம்பப்படும் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மர்ம மரணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் சாரதியாக கடமையாற்றிய இராணுவ வீரர் ஒருவரை கைது செய்வது தொடர்பில் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி மற்றும் கிருலப்பனை ப் பகுதிகளில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ள சீ.சீ.ரி.வி. காணொளிகள் தற் சமயம் கொழும்பு பல்கலையில் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ள நிலையிலேயே பொலிஸ் தலைமையக தகவல்கள் இதனை தெரிவித்தன.
குறித்த வீடியோ காட்சியில் மஹிந்தவின் முன்னாள் சாரதியான குறித்த இராணுவ வீரர் துப்பாகி ஒன்றுடன் தோன்றுவது போன்ற காட்சிகள் உள்ளதாகவும் இந் நிலையிலெயே அடுத்து வரும் சில நாட்களில் அவர் கைதுச் செய்யப்படலாம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சாரதி, தாஜூடீனை ரி.56 ரக துப்பாக்கியில் தாக்குவது பாதுகாப்பு கெமராவில் தெளிவாக பதிவாகியுள்ளதாகவும் தாக்கப்பட்ட தாஜூடீன் மார்பை பிடித்து கொண்டு கீழே விழுவதும் , அப்போது அவர் அருகில் இருந்து விலகிச் செல்லும் அச்சாரதியின் கையில் இரத்தம் படிந்த ரம்போ ரக கத்தி இருப்பதையும் தெளிவாக காணக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொலைக்கு உதவியவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையிலேயே மஹிந்தவின் முன்னாள் சாரதியான குறித்த நபர் இடை நடுவே அந்த பணியில் இருந்து நீக்கப்பட்டு திருகோணமலைக்கு முகாமுக்கு இடமாற்றப்பட்டதாகவும் பெரும்பாலும் இந்த வாரத்தில் அவரது கைது இடம்பெறலாம் எனவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டின.
எவ்வாறாயினும் கொழும்பு பல்கலைக்கழைகத்தின் ஆய்வின் பின்னர் எதிர்வரும் 10 நாட்களுக்குள் சீ.சீ.ரி.வி.காணொளி குறித்த அறிக்கை மன்றுக்கு வழங்கப்படலாம் என தெரிகின்றது.
0 Comments