Subscribe Us

header ads

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அயர்லாந்து மக்களுக்கு, முஸ்லிகளின் நிதி உதவி ! நாடு முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களில் நிதி வசூலிக்கப்பட்டது.


முஸ்லிம்கள், மக்கள் சந்திக்கும் பேரழிவுகளின் போது ஏன் முதலில் உதவிக்கு வருகின்றார்கள் என்பது தமிழ் நாட்டில் மட்டும் நடக்கும் ஒரு சம்பவம் அல்ல. உலகம் முழுவதும், இது நடந்தாலும், ஊடகங்களின் நேர்மையின்மையால் செய்திகள் மறைக்கப்பட்டு வருகின்றது.


அய்ரெலாண்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க, கடந்த வெள்ளிகிழமை, அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நிதி வசூலிக்கப்பட்டது.

மக்களுக்கு உதவுவதின் அவசியத்தை, அனைத்து பள்ளிகளிலும், அங்குள்ள இமாம்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மனித நேயமற்றவர்களால் இஸ்லாத்திற்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டுமென்றால், முஸ்லிம்கள் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலின் படி, பொது சேவைகளில் முன்னுரிமை கொடுக்கவேண்டும். தன் அக்கம் பக்கத்தில் இருக்கும் மக்களுக்கு, ஆபத்து என்றால் முதலில் செல்வோராக முஸ்லிம்கள் இருக்க வேண்டும்.

நபியின் பொன்மொழிகள்:

"தன் அண்டை வீட்டான் பசித்து இருக்க, தான் மட்டும் வயிறார உண்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல". 

"இஸ்லாம் என்பதே பிறருடைய நலம் நாடுவது தான்."


Post a Comment

0 Comments