அமைச்சர் ரிசாட் அவர்களுக்கு தொடர்ச்சியாக புத்திஜீவிகள் தனது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்..
வில்பத்து விவகாரமானது தூர நோக்கோடு சிந்திக்க வேண்டியம் விடயமாகும் இந்த விடயத்தை எடுத்தோம் கவுத்தோம் என்று இல்லாமல் சற்று சிந்தித்து செயல்படாவேண்டும்..
இந்தநாடில் ஒரு ஞானசர தேரர் தொல்லைகள் தாங்க முடியாமல் உள்ள நேரத்தில் இந்த விவாதம் மூலம் 1000 ஞானசார தேரர்களை அமைச்சர் ரிசாட் உருவாக்க போகின்றார்..
வில்பத்து விவகாரம் என்பது ஆனந்த தேரருடன் பேசி தீர்க வேண்டிய விடயமல்ல ஜனாதிபதி பிரதமருடன் பேசி தீர்க்க வேண்டிய விடயம்..
வில்பத்து விவகாரத்தை கையில் எடுத்து அமைச்சர் ரிசாட் அரசியல் செய்யமுனைய கூடாது..
அரசியல் வேறு வில்பத்து வேறு என்ற தொனியில் அமைச்சர் ரிசாட் செயல்பட வேண்டும்.
இன்று நடக்கவிருக்கும் விவாதத்தை லட்சகணக்கான சிங்கள சமுகம் பார்வையிடும் இதனால் முஸ்லிம் சமுகத்தின் மீதான கோபமும் ஆத்திரமும் இன்னும் அதிகரிக்கலாம்.
ஆகவே அமைச்சர் ரிசாட் எதிர்காலங்களில் இவ்வாறான நடவடிக்கைகளிலிருந்து தன்னை முற்றுமுழுதாக மாற்ற வேண்டும்..
இன்று உள்ள நல்லாட்சி ஊடகவே அனைத்து பணிகளையும் செய்யமுடியும்..
அரசாங்கத்திடம் பேசுவதை விட்டுவிட்டு ஏன் அமைச்சர் ரிசாட் யாரோ ஒரு தேரரிடம் பேசுகின்றார் என்ற கேள்வியும் எழுகின்றது ???
அண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிரதமரிடம் மூன்றம்ச கோரிக்கையை வைத்துள்ளார் அந்த கோரிக்கையின் படி முதலாவது அம்சம் வடபுல மீள்குடியேற்றமாகும்..
அதை பிரதமரும் ஏற்றுக்கொண்டதாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது.
அவ்வேலையில் அமைச்சர் ரிசாட் அவர்கள் மு கா தலைவரின் கோரிக்கைகளை நிறைவேற்ற பிரதமருக்கு அழுத்தம் கொடுக்காமல் அல்லது அந்த கோரிக்கை சம்பந்தமாக ஒரு முழு ஆவணத்தை தயார் செய்யாமல் இவ்வாறு யாரோ ஒரு மூன்றாம் தரப்பிடம் பேசுவதை இந்த சமுகம் ஏற்றுக்கொள்ள முடியாது..
அமைச்சர் ரிசாட்டின் இந்த செயலானது முஸ்லிம் சமூகத்தின் மீது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நம்மால் உணரமுடியாது..
எந்த தாக்கமும் நம் சமுகத்தின் மீது பாதிக்காமல் அல்லவிடம் பிராத்திப்போம்
H.M.SAMOON.BA LLB
புத்திஜீவிகள் ஒன்றியம்
தென்கிழக்கு
0 Comments