Subscribe Us

header ads

றிசாத் பதியுதீன் பவுண்டேஷன் 8 வது தடவையாக நடாத்தும் க.பொத.த(சா/த) மாணவர்களுக்கான இலவச முன்னோடி பரீட்சை ஒரு பார்வை

கற்பவர்களுக்கு உதவி செய்பவர்களாக இருங்கள் என்பது இஸ்லாத்தின் நல்லாசியாகும்.அவ்வாறான கல்விக்கு இன்று உயிர்கொடுப்பவர்கள் சிலரை பார்க்க முடிகின்றது.குறிபபாக இலங்கையின் கல்வி வரலாற்றில் பேசப்படக் கூடியவர்களில் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களை முதன்மைப்படுத்த முடியும்,இவரது துாய மற்றும் துார சிந்தணை இன்று பல துறைசார்ந்தவர்களையும்,நல்லவர்களை உருவாக்கும் நல்லவர்களையும் கொடுத்துள்ளதை பார்க்க முடிகின்றது.

சிலர் தமது வட்டத்திற்குள் மட்டும் கற்பவர்களுக்கு உதவி செய்பவர்களாக இன்றும் இருக்கின்றனர்.அதனையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது,கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் சமூகத்தின் கல்வித் தேவையினையும்,கற்பவர்களின் இலக்கு நோக்கு பயணத்திற்கு துணை புரிந்து வரும் வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட றிசாத் பதியுதீன் பவுண்டேசன் இன்று நாடு தழுவிய முறையில் தமது கல்வி செயற்பாட்டினை விஸ்தீரனப்படுத்தியுள்ளது.

றிசாத் பதியுதீன் பவுண்டேஷன் வருடா வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தைரியத்துடனும்,தெளிவுடனும் பரீட்சை மண்டபத்துக்குள் அனுப்பும்முன்னோடி மாதிரி பரீட்சை திட்டமொன்றினை சில குறிப்பிட்ட மாவட்டங்களில் மேற்கொண்ட வந்தன.இதனது வரவேற்பும் ஏனைய மாவட்டங்களில் பெறப்பட்ட தமிழ் மொழிப் பாடசாலைகளை மையப்படுத்தி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இதனை 25 மாவட்டங்களிலும் முன்னெடுப்பதன் அவசியத்தை பவுண்டேஷனின் நிறுவுனர் அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டக் கூடியது.

கல்வித்துறையில் உள்ளவர்கள அனுகி அவர்களின் ஆலோசனையின் பேரில் நாடு தழுவிய முறையில் கா.பொ.த.சாதாரண தர பரீ்ட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை செயன் முறை பரீட்சையொன்றிற்கும்,அவர்களது புள்ளிகள் எவ்வாறு பதியப்படுகின்றது என்பது தொடர்பிலும்,மாணவர்கள் பரீட்சைக்கு முன்னார் இன்னும் பெற வேண்டிய அறிவு தொடர்பில் அறிவூட்டுவது இந்த றிசாத் பதியுதீன் பவுண்டேஷனின் முக்கிய பணியாகும்.

இந்த பணிக்கு தற்போது மாவட்டங்கள் தயாராகிவருகின்ற நிலையில் இது வரையிலும் தமிழ் மொழி மூலமாக தோற்றவுள்ள 30 ஆயிரம் மாணவர்கள் இந்த இலவச செயலமர்வுக்கு தயாராகிவருகின்றனர்.

குறிப்பாக தமிழ்,கணிதம்,ஆங்கிலம்,விஞ்ஞானம்வரலாறு ஆகிய 5 பாடங்களில் இந்த மாணவர்களின் திறமைகளையும்,ஞாபசக்தியினையும் பரிசோதிக்கும் பரீட்சையாக இது நடத்தப்படவுள்ளது.இதன் மூலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரசாங்க கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தங்களை ஒரு முறை மீளாய்வு செய்து கொள்ள முடியும்,அது போல் சிறந்த பெறுபேருகளை பெறுவதற்கும் இந்த முன்னோடி பரீட்சை இடம் கொடுக்கும் என்பது றிசாத் பதியுதீன் பவுண்டேஷனின் நிறுவுனர் அமைச்சர் றிசாத் பதியுதீனின் எதிர்பார்ப்பாகும்.

இந்த இலக்கை அடைந்து கொள்ள சமூகத்தில் உள்ள பல்துறையினரும் தமது ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

(அபூ அஸ்ஜத்)

Post a Comment

0 Comments