Subscribe Us

header ads

கறுப்பனுக்கு பிறந்த வெள்ளையன்- தாராபுரத்தில் ஓர் அதிசயம்! (PHOTOS)

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், ராமபட்டினத்தைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (45). விவசாயியான இவர், எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் கறுப்பு நிறத்தில் இருக்கும் எருமை மாட்டுக்கு, தற்போது வெள்ளை நிறத்தில் கன்றுக்குட்டி பிறந்திருக்கிறது. இந்த தகவல் அறிந்து ஆச்சரியத்துடன் பார்க்க வரும் மக்கள், அதனுடன் செல்ஃபி எடுத்துவிட்டு செல்கின்றனர்.

அந்த எருமை மாட்டுக்கு சினை ஊசி போட்ட மருத்துவர் விஸ்வநாதன், 25 ஆண்டுகளாக அந்த கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் மாடுகளுக்கு சினை ஊசி போட்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தனது அனுபவத்தில் அரைகுறை வெள்ளை நிறத்தில் எருமை கன்றுக்குட்டி பிறந்து பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படி செம்மறி ஆடு போல் முழுக்க முழுக்க பால் வெள்ளையில் இங்குதான் முதன் முறை பார்க்கிறேன். மேலும் இது 'அல்பினிஸம்' போல ஏதேனும் நோயா என்று பார்க்கையில், அப்படி ஏதும் இல்லை. கன்றுக்குட்டி ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது" என்றார்.
விவசாயி சின்னச்சாமியிடம், கன்றுக்குட்டியை பற்றி கேட்டபோது, இது தனக்கும் ஆச்சர்யமாகதான் இருப்பதாகவும் . அதை விட இந்த கன்றுக்குட்டியால் தாம் மிகவும் பிரபலமடைந்துள்ளதாகவும் சிரிக்கிறார். 

இது பெண் கன்றுக்குட்டி என்பதால் விற்காமல் தானே வளர்ப்பேன் என்றும் கூறுகிறார்.

செய்தி மற்றும் படங்கள்: சா.கவியரசன்



-Vikatan-



Post a Comment

0 Comments