பதுங்கு குழி அமைக்கப்பட்டதும் அது பற்றி தகவல் வெளியிட்டதும் பிழையில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பதுங்கு குழி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அப்போது நாட்டில் இருந்த சூழ்நிலை காரணமாக பாதுகாப்பு பதுங்கு குழி அமைக்கப்பட்டதில் எவ்வித பிழையும் கிடையாது.
எனினும், தற்போது போர் முடிவடைந்துள்ள நிலையில் பதுங்கு குழி பற்றிய தகவல்களை வெளியிட்டமையிலும் பிழையில்லை.
பிரபாகரனின் பதுங்கு குழியை நாம் சென்று பார்வையிட்டிருந்தோம்.
எனவே இந்த பதுங்கு குழியை பார்ப்பதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.
அவ்வாறான விடயங்களை பார்ப்பதன் மூலம் தான் நாட்டில் போர் இடம்பெற்றது என்பது மக்களுக்கு நினைவுக்கு வரும் என தயாசிறி ஜயசேகர சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
0 Comments