Subscribe Us

header ads

இலங்கையில் இளவயது எயிட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் அண்மைக்காலமாக இளவயது எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் மட்டும் 15-25 வயதுக்குட்பட்ட 19 எயிட்ஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணியகத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

இவ்வாறு கண்டறியப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்றும் யுவதிகள் குறைவான எண்ணிக்கையிலேயே எயிட்ஸ் நோய் தாக்கத்துக்கு உள்ளாவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் ஒப்பீட்டளவில் இலங்கையின் ஏனைய மாவட்டங்களை விட கொழும்பு மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் கண்டறியப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments