பாட்டியின் கோடரிபட்டு குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் மஹியங்கனை- தியகோபல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கோடாரியால் விறகு வெட்டிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது குழந்தை தற்செயலாக உள் நுழைந்ததாகவும் , இதன்போது கோடரிபட்டு அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாட்டி வேகமாக கோடரியை ஓங்கி விறகை வெட்டிய வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் அவரால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் வயது 18 மாதங்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் கழுத்தில் காயமேற்பட்டுள்ளதாகவும் , முதலில் பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனையடுத்தே அவர் உயிரிழந்துள்ளார்.
0 Comments