ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியத்தில் திருமணத்துக்கு அப்பாலான உறவில் ஈடுபட்டமைக்காக இளம் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரோஸொக் பிராந்தியத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி மரணதண்டனையை வெளிப்படுத்தும் 30 செக்கன் வீடியோ காட்சி இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
ரொக்ஸஹனா என்ற மேற்படி 19 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவராகத் தோன்றும் குறிப்பிட்ட பெண், தரையில் ஏற்படுத்தப்பட்டிருந்த குழியொன்றில் அமர்ந்திருக்க, சுமார் 15 ஆண்கள் அவர் மீது கற்களை வீசி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை இந்த வீடியோ காட்சி வெளிப்படுத்துகிறது. அந்த வீடியோ காட்சியில் கற்கள் உடல் மீது படுகையில் அந்தப் பெண் உச்ச ஸ்தாயியில் கூக்குரலிட்டு அழுகிறார்.
அங்கு இவ்வாறு திருமணத்துக்கு அப்பாலான உறவு குறித்து பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றப்படு வது இந்த வருடத்தில் இதுவே முதல் தடவையாகும்.
0 Comments