Subscribe Us

header ads

கள்ளக் காதல் விவ­காரம் ஒன்றில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட இலங்கை பணிப் பெண்­ணிற்கு அரசாங்கம் நடவடிக்கை

கள்ளக் காதல் விவ­காரம் ஒன்றில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட இலங்கை பணிப் பெண்­ணொ­ரு­வ­ருக்கு கல்லால் அடித்து மர­ணத்தை ஏற்­ப­டுத்­து­மாறு சவூதி அரே­பிய நீதி­மன்றம் ஒன்று தீர்ப்­ப­ளித்­துள்­ள­தாக சவூ­தியில் உள்ள இலங்கை தூத­ரக தக­வல்கள் தெரி­வி­க்கின்­றன.

கொழும்பு மரு­தானை பிர­தே­சத்தைச் சேர்ந்த திரு­ம­ண­மான பெண்­ணொ­ரு­வ­ருக்கே இவ்­வாறு மரண தண்டனை தீர்ப்பை சவூதி அரே­பிய நீதி­மன்றம் வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவ­ருடன் பாலியல் ரீதி­யாக உறவு வைத்­தி­ருந்­த­தாக கூறப்­படும் விவா­க­மா­காத பிறி­தொரு இலங்கை இளை­ஞ­ருக்கு 100 கசை­ய­டிகள் தண்­ட­னை­யாக விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் சவூதி நீதி­மன்றில் இடம்­பெற்ற போது இந்த இலங்கை பெண் தான் குறித்த இளை­ஞ­ருடன் உறவு கொண்­ட­தாக ஒப்­புக்கொண்டுள்ளார்.

குறித்த ஒப்­புதல் வாக்குமூலத்தின் அடிப்­ப­டை­யி­லேயே தண்­டனை தீர்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

எவ்­வா­றா­யினும் இந்த தீர்ப்­புக்கு எதி­ராக மேன் முறை­யீடு செய்ய அவ­காசம் உள்ள நிலையில், மேன்முறை­யீட்­டினைச் செய்து தேவை­யான சட்ட உத­வி­களை வழங்கி குறித்த பெண்­ணுக்கு விதிக்­கப்­பட்டதண்­ட­னையை குறைக்க அல்­லது ரத்துச் செய்ய சவூ­தியில் உள்ள இலங்கை தூத­ரகம் ஊடாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அதற்­கான ஆலோசனைகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவின் ஆலோசனை தூதரகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

Post a Comment

0 Comments